வீடுதோறும் ஸ்ரீ ஸ்வாமிஜீ திவ்ய பாதுகைகள்

ஹரி ஓம்
ஸ்ரீ சுவாமி சத்யானந்தருடைய நூறாவது ஜெயந்தி வருஷமான 2023 ஆண்டில் சென்னை வாழ் மக்களாகிய நாம் மாபெரும் பாக்கியம் அடைய இருக்கிறோம்.

சுவாமி நிரஞ்சனாநந்தருடைய அருட்பெரும் கருணையினாலும் சுவாமி சத்சங்கி அவர்களின் பேரருளாலும் குரு தேவர் ஸ்ரீ சுவாமி சத்யானந்தருடைய திவ்ய பாதுகைகள் நமது சத்யானந்த யோக மையத்தில் வெள்ளிக்கவசம் பூண்டு அருள் பாலிக்கிறது.

இவ்வாண்டில் குரு பூர்ணிமா மகோத்சவத்தின் பொழுது ஸ்ரீ சுவாமிஜி அவர்களின் பாதுகைகள் ரிக்கியா பீட்டில் ஸ்ரீ சுவாமிஜியின் சமாதியிலும் அவரது கணேஷ் குடிர் வளாகத்திலும் சதுர் வேத பாராயணம் மற்றும் குருபூர்ணிமா மகோத்சவத்தின் பொழுது வைக்கப்பட்டு ஸ்ரீ சுவாமிஜி அவர்களுடைய அனுக்கிரகத்துடன் சென்னை திரும்பியது. இது தாங்கள் அனைவரும் முன்பே அறிந்ததே.

லக்ஷ்மி நாராயண மகாயக்ஞத்தின் பொழுது ஸ்ரீ சுவாமிஜி அவர்களின் திவ்ய பாதுகைகள் கங்கா தர்ஷன் ஆசிரமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்காடாவிலும் ஸ்ரீ சுவாமிஜி உடைய தங்குமிடமாக விளங்கிய ஸ்ரீநிவாசிலும் மற்றும் ஸ்ரீ சுவாமிஜி பல தவங்கள் புரிந்து சித்தி பெற்ற பாதுகா தர்ஷன் ஆசிரமத்திலும் லக்ஷ்மி நாராயண வேதியிலும் வைக்கப்பட்டு ஸ்ரீ சுவாமிஜி மற்றும் சிவானந்தர் மற்றும் லக்ஷ்மி நாராயணர்கள் நல் அருளை பெற்று மீண்டும் திருவல்லிக்கேணியில் சத்யானந்தா யோக மையத்தில் தற்பொழுது இருக்கின்றது.

அமிர்த லஹரி ஆண்டில் ஸ்ரீ சுவாமிஜியின் பாதுகைகள் சென்னையில் வாழும் ஸ்ரீ சுவாமிஜியுடைய சீடர்கள் இல்லங்களுக்கு அனுக்கிரக யாத்திரை மேற்கொள்ள இருக்கிறது.

வரும் மாதங்களில் ஸ்ரீ சுவாமிஜியின் திவ்ய பாதுகைகள் இல்லம் தோறும் பாதுகா ஆராதனா ஏற்பாடு செய்யப்படுகிறது.